PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

தங்கம் திடீர் ஏற்றம்… வெள்ளி விலை அதிர்ச்சி! பின்னணி என்ன?

தங்கம் விலை உயர்வு

தங்கத்தின் மீதான மதிப்பு எப்போதும் குறையாது. அதற்கு ஏற்றார் போல தங்கத்தின் விலையானது தினந்தோறும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தங்களது பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாக சிறுக சிறுக தங்கம் வாங்க திட்டமிட்ட மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தது தங்கம் விலை. 

தவிக்கும் நடுத்தர வர்க்க மக்கள்

இதற்கு முக்கிய காரணமாக பல்வேறு நாடுகள் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்தனர். இதனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் விலை 1.34 லட்சத்தை எட்டியது. இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். நகைகடைகளில் வாசலில் வேடிக்கை பார்க்கும் நிலை உருவானது. இந்த நிலையில் தான் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கத்தின் விலையானது திடீரென குறைந்தது.

ஈரான் போர் நிறுத்தம்- மீண்டும் உயரும் தங்கம் விலை

ஈரான் போரால் கச்சா எண்ணெய் மீது முதலீடு அதிகரித்தது. இதனால் தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஈரான்- அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  

தங்கம் விலை நிலவரம்

  • ஏப்ரல் 4ஆம் தேதி- சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், கிராமிற்கு 100 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கும் விற்பனை.
  • ஏப்ரல் 5ஆம் தேதி- தங்கம் விலையில் மாற்றமில்லை
  • ஏப்ரல் 6ஆம் தேதி கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து 13,990 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து 1,11,920 ரூபாய்க்கு விற்பனையானது.
  • ஏப்ரல் 7ஆம் தேதி தங்கத்தின் விலையானது குறைந்தது. கிராம் ஒன்றுக்கு 130 ரூபாய் குறைந்து 13,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து 1,10,880  ரூபாய்க்கு விற்பனை 

இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன.?

தங்கத்தின் விலையானது நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது.  இந்த நிலையில் இன்று கிராம் 340 ருபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,720 ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 13ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல வெள்ளியின் விலையானது அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 65ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *